Thursday, March 25, 2010

தமிழ் தட்டச்சு

இயேசுவுக்கே மகிமை

தமிழ் தட்டச்சு


கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்களே, இயேசுவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்! கிறிஸ்துவுக்காக எழுதவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? ஆம் எழுத வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருக்கிறது, ஆனால் தமிழ் டைப் ரைட்டிங் தெரியாது அதுதானே பிரச்சினை என்கிறீர்களா ? உங்கள் கவலையை விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

http://www.google.com/transliterate/Tamil

இப்போது நீங்கள் அம்மா என்று டைப் செய்ய விரும்புகிறீர்களா? ammaa என்று ஆங்கிலத்தில் டைப் செய்துவிட்டு என்டர் செய்யுங்கள், இப்போது ஆங்கில வார்த்தை அம்மா என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு நமக்கு கிடைக்கும். இயேசுவே என்று டைப் செய்ய yesuve என்று ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள், இப்போது என்டர் பண்ணுங்கள் ஏசுவே என்று வரும். ஆனால் நீங்கள் ஏசுவே என்று விரும்பாமல் இயேசுவே என்று வர விரும்பினால் yesuve என்று வந்தவுடன் இரண்டுமுறை backspace என்டர் செய்யுங்கள், இப்போது ஐந்து விதமான வார்த்தைகள் வரும். அதில் சரியானதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளவும். கூகிள் நிருவனதிற்க்காக தேவனை துதிக்கிறேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக. தேவனுடைய நாம மகிமைக்காக நீங்கள் இப்பொழுது எழுத ஆரம்பியுங்கள்.

மேற்கூறிய யாவும் online லில் மட்டுமே பண்ண முடியும். நீங்கள் off line லில் பண்ண விரும்பினால் Google Transliteration IME என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிப்பொறியில் install செய்துகொள்ளவும்.

http://www.google.com/ime/transliteration/


மேலும் விவரங்களுக்கு Installation Instructions ஐ பார்க்கவும்

http://www.google.com/ime/transliteration/help.html#installation

நீங்கள் சிறந்த படைப்புகளை அனுப்பினால் நமது இன்று ஒரு தகவல் வேதமும் விளக்கமும் நடுவர்க் குழு ஆய்வு செய்து மின்னஞ்சலாக அனுப்ப தயாராக உள்ளது, மேலும் நமது http://vethamumvilakkamum.blogspot.com/ லும் வெளியிடப் படும். தங்களது படைப்புகள் கீழ்க் கண்ட நிபந்தனைகளை நிறைவு செய்வதாக இருக்க வேண்டும்.

1 .தேவனுடைய நாமம் மகிமைப் படுவதாக இருக்க வேண்டும்.

2 .பரிசுத்த வேத வசனகளுக்கு முரண்பட்டதாக இருக்கக் கூடாது.

3 .ஆவிக்குரிய ஜீவியத்துக்கு பயன்படுவதாக அல்லது ஆவியை உற்சாகப் படுத்துவதாக இருக்க வேண்டும்.

4 .இன்று ஒரு தகவல் வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

5 .உங்கள் படைப்புகளை திருத்தி அமைக்க நடுவர்க் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு.

6 .உங்கள் படைப்புகள் கட்டுரையாகவோ, கவிதைகளாகவோ, சிறுகதைகளாகவோ, இந்தியாவின் மூடப் பழக்க வழக்கங்களால் ஏழை ஜனங்கள் அனுபவிக்கும் கொடுமைகளாகவோ, மூடப் பழக்க வழக்கங்களை வேரறுக்க வாலிபர்களை தூண்டுவதாகவோ, சமுதாய சீரழிவுகளை விளக்குவதாகவோ, ஜெபிக்கிற ஜெப வீரர்களை உற்சாக படுத்துவதாகவோ, விசுவாசத்தை உயிர்பிக்கிற உயிருள்ள சாட்சிகளாகவோ இருக்கலாம்.

5 .உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail .com

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment