Friday, April 23, 2010

பன்றியும் அதன் அசுத்த வாழ்கையும்

இயேசுவுக்கே மகிமை

பன்றியும் அதன் அசுத்த வாழ்கையும்

லேவியராகமம் 11:7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

உபாகமம் 14:8 பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.

நான்கு கால்களால் நடமாடும் பிராணிகளில் மிகவும் அருவருப்பான ஜீவ ஜந்து பன்றி. காரணம் இது அசுத்தத்தையே சாப்பிட்டு, அசுத்தத்திலேயே வாழும் பிராணி. பழைய ஏற்பாட்டில் இதை சாப்பிடவோ, தொடவோ கூடாது.

பன்றி ஒரு போதும் தன் தலையை உயர்த்தி வானத்தை அண்ணாந்து பார்க்காது. எப்போதும் பன்றி அசுத்தத்தையே நோக்கிப் பார்க்கும். எனவே இதன் தலை எப்போதும் பூமியை நோக்கியே இருக்கும். பன்றி எப்போதும் சேற்றிலே புரள்வதையே விரும்பும்.

புதிய ஏற்பாட்டில் பன்றியை, பாவத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு ஒப்பிடலாம். ஆம் பாவ சேற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன், ஒரு போதும் உன்னதத்தையோ அல்லது பரலோகத்தையோ, அதில் வாசம் பண்ணும் தேவனையோ நோக்கி பார்க்க மாட்டன். பன்றி அசுத்தத்தை நோக்கிப் பார்ப்பது போல இவர்கள், உலகத்தின் சிற்றின்பங்களாகிய விபச்சாரம், வேசித்தனம், குடி, வெறி, களியாட்டு, சினிமா, பீடி, சிகரெட் இவைகளையே நோக்கிப்பார்ப்பார்கள்.

பாவ சேற்றில் வாழும் ஒரு மனிதனுக்கு இயேசுவின் சுவிஷேசத்தை கூறினால் அவன் அவைகளை அவமதிப்பதோடு, அவர்களை தாக்குவதற்கு முற்படுவான். ஆகவே தான் பரிசுத்த வேதம் கூறுகிறது,

மத்தேயு 7:6 உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.

இயேசுவின் ராத்தத்தினால் கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகள் ஜாக்கிரதையுள்ளவர்களாய் இராவிட்டால் நாமும் வழிதவறிப்போக வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் வேதம் நம்மை பார்த்து சொல்லும்,

II பேதுரு 2:22 நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

அப்படி ஒரு பரிசுத்த குலைச்சல் உங்களுக்கும், எனக்கும் வராதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டிய கிருபைகளை தேவன் நமக்கு தருவாராக!

மேலும் ஒரு மனிதனிலிருந்து புறப்படுகிற அசுத்த ஆவி, பரிசுத்தமில்லாமல் வாழும் வேறொரு மனிதனுக்குள் புகுந்து விட வாய்ப்புகள் உள்ளன.

மத்தேயு 8:31 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

ஒரு மனிதனுக்குள் பிசாசு இருக்குமேயானால், அந்த மனிதனுக்கு மருத்துவர்களால் அடையாளம் கடுபிடிக்க முடியாத வியாதிகள் வரலாம், சமாதான குறைவுகள் வரலாம். இதினிமித்தமாக பிசாசு அவர்களை தற்கொலைக்கு தூண்டி அவர்களுக்கு அழிவை உண்டுபண்ண வாய்ப்புகள் உண்டு.

மாற்கு 5:13 அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.

ஆகவே கிறிஸ்த்துவுக்குள் பிரியமான நண்பர்களே பாவத்தை விட்டு, பரிசுத்தமாய் வாழ நாம் பிரயாசப்படுவோம். அதற்கு வேண்டிய கிருபைகளை தேவன் நமக்கு தருவாராக!

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

என் ஆத்ம நேசர் இயேசு

இயேசுவுக்கே மகிமை

என் ஆத்ம நேசர் இயேசு

உன்னதப்பாட்டு 3:11 சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய இயேசுவின் சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய பிதாவாகிய தேவன் தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.

பதினாயிரங்களுள் சிறந்தவராம் இயேசுவின் அழகு :

இயேசு ஆயிரம், பதினாயிரம் பேர்களில் வெகு அழகானவர். இயேசுவுக்கு இணையாய் இந்த பூமியில் அழகிற்சிறந்தவர் ஒருவருமில்லை. இந்த பூமியில் எவ்வளவு அழகாக ஒருவர் இருந்தாலும், அவர்களை கூர்ந்து கவனித்தால் அவர்களில் பல குறைகளை கண்டுபிடிக்க முடியும். அதாவது அவர்களுடைய மூக்கு சற்று கோணலாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய பல் சற்று முன்பாக நீட்டிக் கொண்டிருக்கலாம். இப்படி ஏதோ ஒரு குறை இருக்கலாம். ஆனால் நான் இங்கு சொல்லும் என் ஆத்ம சிநேகிதர் இயேசுவோ முற்றிலும் அழகானவர், இவரில் யாரும் பழுதொன்றும் கண்டுபிடிக்க முடியாத பூரண அழகுள்ளவர். தலை தங்க மயமான தேவன்.

இயேசுவை ஓர் பட்டை தீட்டிய வைரத்துடன் ஒப்பிட்டால் அவருடைய ஒளி பலவாறாக இருக்கும். ஒரு பட்டை தீட்டிய வைரத்தை, விளக்கு வெளிச்சத்தில் வைத்து பார்த்தால் அதின் ஒரு முகப்பிலிருந்து பொன்மயமான மஞ்சள் ஒளி வீசும், அதை சற்று திருப்பி இன்னொரு முகப்பை பார்த்தால் அதிலிருந்து வெண்மையான ஒளி வீசும். அது போல ஆண்டவர் இயேசுவை வேத வசன வெளிச்சத்தில் வைத்துப் பார்த்தால் அவரை நாம் ஆராதிக்கும் போது அவருடைய முகத்திலிருந்து பொன் மயமான ஷக்கினா மகிமை மஞ்சள் நிறத்தில் வீசுவதை காணலாம். நாம் அவருடைய பரிசுத்தத்தை குறித்துப் பார்த்தால் அவருடைய முகத்திலிருந்து வெண்ணிறமான ஒளி வீசுவதை காணலாம். நாம் அவருடைய தியாகத்தை குறித்து பார்க்கும் போது, அவருடைய முகத்திலிருந்து அழகிய சிகப்பு நிற ஒளி வீசுவதை காணலாம். அவர் சிலுவையில் நமக்கு கொடுத்த செழிப்பையும், ஆசீர்வாதத்தையும் நாம் தியானித்தால் அவர் முகத்திலிருந்து பச்சை நிற ஒளி வீசுவதை நாம் பார்க்கலாம்.

உன்னதப்பாட்டு 5 :

9. ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதில் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

10.
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர்.

11.
அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது.

12.
அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.

13.
அவர் கன்னங்கள் கந்தவர்க்கப்பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப்போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.

14.
அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

15.
அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.

16.
அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

சர்வ வல்லமையுள்ள தேவன் இயேசுவின் தோற்றம் :

தானியேல் 10 :

5. என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன்.

6.
அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னனலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

வெளி 1 :

13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

14.
அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;

15.
அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது.

16.
தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது.

17.
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

இயேசுவின் இடி முழக்கம் போன்ற சத்தம் :

சங்கீதம் 29 :

4. கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.

5.
கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

6.
அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

7.
கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.

8.
கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.

9.
கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.

இயேசுவின் பராக்கிரமம் :

ஏசாயா 40 :

12. தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?

13.
கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?

இயேசு யார் ?

I திமோத்தேயு 6:


15. அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

16.
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக.

இந்த இயேசுவை பார்க்க முடியுமா? அதற்கான தகுதிகள் என்ன?

1. மத்தேயு 5:8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

2. எபிரெயர் 12:14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.


இயேசு

ரொம்ப ரொம்ப நல்லவங்க1

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Monday, April 19, 2010

என் இனிய பரலோகமே

இயேசுவுக்கே மகிமை

என் இனிய பரலோகமே

சங்கீதம் 48:2 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம்.

பரலோக ராஜ்யம் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ள நாம் யாவரும் மிகவும் ஆர்வமுள்ளவர்களே. ஆனால் பரலோக ராஜ்யத்தை நாம் இந்த பூமியிலுள்ள யாதொன்றுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத மிக பிரமாண்டமானது. ஆனாலும் நாம் புரிந்து கொள்ளும் படி சாலமோன் கட்டிய தேவாலயத்துடன் ஓர் கண்ணோட்டம்.

சாலமோன் கட்டிய தேவாலயம், வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி இன்றைய மதிப்பில் சுமார் 10000 கோடி ரூபாய் செலவு பண்ணி, சுமார் ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த தேவாலயத்தை பார்த்த சேபாவின் ராஜ ஸ்திரீ ஆச்சர்யத்தால் பிரமை கொண்டாள். தேவாலயத்தின் எல்லா ஒழுங்குகளையும், நேர்த்தியையும், அழகையும் பார்த்த அவள் மதி மயங்கிப்போனாள்.

I ராஜாக்கள் 10

4. சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,

5.
அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

6.
ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.

7.
நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.

8.
உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

பரலோக ராஜ்யத்தை இஸ்ரேல தேசத்துடன் ஒப்பிட்டால் அதிலுள்ள சீயோன் மலை மிக உயர்ந்ததாகும். அதுபோல ஆண்டவராகிய இயேசுவின் சிங்காசனம் இருக்குமிடம், பரலோகத்தில் சீயோன் என்றழைக்கப்படும். சீயோனுக்கு சற்று கீழாக இருப்பது எருசலேம் மலை ஆகும். இது பரிசுத்தமாய் வாழ்ந்து, தேவ சித்தத்தை பூரணமாய் செய்துமுடித்த பூரணமாக்கப் பட்ட நீதிமான்கள் இருக்குமிடம். இதை பரம எருசலேம் என்கிறார்கள்.

எபிரெயர் 12 :

22.
நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும்,

23.
பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும்,

24.
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.

பரலோக ராஜ்யமோ சுமார் 2000 ஆண்டுகளாக சர்வ வல்லமையுள்ள தேவனால் கைவேலையில்லாமல் அவருடைய ஞானத்தினால் தங்கம், வைரம் மற்றும் முத்துக்களால் கட்டப்பட்டட்டுக் கொண்டிருக்கிறது. வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி பரலோகம் சுமார் 2500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடையது. இது சாலமோன் கட்டிய தேவாலயத்தை பார்க்கிலும் பல ஆயிரம்கோடி மடங்கு விசேஷித்தது. நாம் பரலோக ராஜ்யதிற்குள் பிரவேசிக்கும் போது சேபாவின் ராஜ ஸ்திரீயை போல பரலோகத்தின் பிரமாண்டத்தை பார்த்து பிரமித்து நிற்போம்.

தேவனுடைய மகிமையடைந்த பரம எருசலேம்

வெளி 21 :

1. பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.

2.
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

4.
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

5.
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

6.
அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.

7.
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.

8.
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

10. பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

11.
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

12.
அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

15.
என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.

16.
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்;

18.
அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்தபளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

19.
நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

20.
ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.

21.
பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

22.
அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

23.
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

24.
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள் பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்

25.
அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.

27.
தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

மேலும் பாவமன்னிப்பு மட்டுமிருந்து, தேவ சித்தம் செய்யாமல், ஞானசிநானம் எடுக்காமல் இருப்பவர்கள் பரம எருசலேமில் பிரவேசிக்க முடியாது. இயேசு யோவான் 14 : 2 ல் சொன்ன படி என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலம் உண்டு என்று சொன்ன படி புதிய வானம், புதிய பூமி என்ற இடங்களில் இவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கலாம். மேலும் பழைய எற்பாட்டு பரிசுத்தவான்கள் தங்களுடைய பாவங்களை நியாயப்பிரமாண முறைப்படி காளை, ஆட்டுக்கடா இவைகளுடைய ரத்தத்தினால் மறைத்தார்கள். ஆனால் இவர்களுக்கு இயேசுவின் ரத்தத்தினால் பூரணமாய் பாவம் மன்னிக்கப்படவில்லை. ஆகவே இவர்களும் பரம எருசலேமில் பிரவேசிக்க முடியாது என்று நான் கருதுகிறேன்.

பரிசுத்த வேதாகமத்தில் அநேக காரியங்கள் உவமையாகவே சொல்லப்பட்டுள்ளது. அதுபோல இந்த காரியங்களை ஒரு திருமணத்துடன் ஒப்பிட்டால், அந்த நிகழ்ச்சியில் மணவாளனும், மணவாட்டியுமே மிக முக்கியமானவர்கள். இதில் இயேசுவை மணவாளனாகவும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை மணவாட்டியாகவும் வேதம் ஒப்பிட்டுள்ளது. மேலும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மணவாளனின் தோழனாகவும், வருகையில் கைவிடப்பட்டு அந்திக் கிறிஸ்த்துவின் காலத்தில் ரத்த சாட்சியாய் மரிப்பவர்கள் மணவாட்டியின் தோழியாகவும் இருப்பார்கள். இது உவமையாக கூறப்பட்டது. மற்ற படி பூமியிலுள்ள திருமணத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இயேசு நம்முடைய பரம பிதா, நாம் அவருடைய அன்பு பிள்ளைகள்.

பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க தகுதிகள் :

1. மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

2. மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

3. யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

4. மத்தேயு 5:20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5. அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.


மத்தேயு 5 :


6. 3.ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

7. 10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.


ஏசாயா 35:10 கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

Saturday, April 17, 2010

இன்று ஒரு கேள்வி – 3

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 3


ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து வெளிப்படுத்தின விசேஷத்தில் தன்னைக் குறித்து சொல்லும் போது நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன் என்றார். அவர் எதைக் குறிக்கும் படி அப்படிச் சொன்னார் என்ற உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 23.04.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சலில் வெளியிடப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

10.04.2010 அன்றைய இன்று ஒரு கேள்வி - 2 க்கான சரியான விடைகள்.


1. முதல் நூற்றாண்டின் எழுப்புதலுக்கு காரணம் பவுலா? பேதுருவா?


நமது நடுவர்க் குழுவின் கருத்து


ஆண்டவராகிய இயேசுவின் நாட்களிலும் யார்ப்பெரியவர்? என்று சீஷர்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. அது போலவே இந்நாட்களிலும் யார்ப்பெரியவர்? எந்த ஊழியம் பெரியது? என்று நமக்குள்ளும் கேள்விஎழுவது வழக்கம். முதல் நூற்றாண்டின் எழுப்புதலுக்கு காரணம் பவுலா? பேதுருவா? என்றால் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார்

I கொரிந்தியர் 3:6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.

I கொரிந்தியர் 3:7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.

ஆம் பவுலும் பேதுருவும் செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தார்கள். ஆனால் அவர்களை தேவன் எதற்காக அழைத்தாரோ அதற்கு தக்கதாக கிருபையைக் கொடுத்தார். ஆகவே இன்றைய நாட்களிலும் நாம் மிகப் பெரிய அளவில் கிருபையை பெற்ற ஊழியர்களைப் பார்த்து நாமும் அதுபோலவே மாற வேண்டும், அது போலவே நாம் செய்ய வேண்டுமென்று நினைப்பது தவறு.

I கொரிந்தியர் 7:17 தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன்.

நம்மை தேவன் பத்து ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய அழைத்திருந்தால் நாம் பத்து ஆத்துமாக்களை ஆதாயம் செய்தால் தாராளமாய் போதுமானது. அதுபோலவே மற்றொருவரை நூறு ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய தேவன் அழைத்திருந்தால் அவர் நூறு ஆத்துமாக்களை ஆதாயம் செய்தாக வேண்டும். அப்படி முறையே ஒவ்வொருவரும் பத்து மற்றும் நூறு ஆத்துமாக்களை ஆதாயம் செய்தால் பரலோகத்தில் இருவருக்கும் சம அளவு கனமும், மகிமையும் கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். மாறாக முதலாமவர் பத்து ஆத்துமாவும், இரண்டாமவர் தொண்ணூறு ஆத்துமாவும் ஆதாயம் செய்திருந்தால் பரலோகத்தில் முதலாமவருக்கு அதிக கனமும், மகிமையும் இரண்டாமவருக்கு சற்று குறைவான கனமும், மகிமையுமே கிடைக்குமென நான் கருதுக்றேன். காரணம் முதலாமவர் நூறு சதவீதம் தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்து முடித்தார். ஆனால் இரண்டாமவர் தொண்ணூறு சதவீதம் மட்டுமே செய்து முடித்துள்ளார்.

மத்தேயு 25:15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.

லூக்கா 12:48 எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்

ஆகவே நமது நடுவர்க் குழுவின் கருத்து, அவரவருக்கு தேவன் கொடுத்த கிருபையின் படி தங்களுடைய ஊழியத்தை நிறைவேற்றி முடித்த தேவ ஊழியர்கள். முதல் நூற்றாண்டின் எழுப்புதலுக்கு இருவருமே முக்கிய பங்காற்றியவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு வேண்டிய கிருபையை கொடுத்தவரும், எழுப்புதலை கட்டளையிட்டவரும் தேவனே.

எபேசியர் 4:7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.