Tuesday, May 4, 2010

என்னுடைய மிகப்பெரிய தவறு

இயேசுவுக்கே மகிமை

என்னுடைய மிகப்பெரிய தவறு

நான் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற்றதால் எனக்கு அரசினர் பொறியியற்கல்லூரியில் எளிதாக Admission கிடைத்தது. ஆனால் என்னுடைய உயிர் நண்பனுக்கு குறைவான மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்ததால் அவனால் பொறியியற்கல்லூரியில் சேருவது மிகவும் கடினமாயிற்று. அவன் என்னை பார்த்தபோது எதாகிலும் கல்லூரியில் seat இருந்தால் அவனுக்கு தெரிவிக்கும் படி என்னை கேட்டிருந்தான். சில மாதங்கள் சென்ற பின்பு புதிய ஒரு கல்லூரியில் சில காலியிடங்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அனால் அதை நான் நண்பனிடம் தெரிவிக்கவில்லை, அவன் ஏதாவது கல்லூரியில் சேர்ந்திருப்பான் என்று நினைத்தேன். ஆறுமாதங்கள் சென்ற பின்பு அந்த நண்பனை சந்தித்தேன். அவன் எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்காததால் தனக்கு ஒரு ஆண்டுகள் வீணாகிவிட்டது என்று அவன் சொல்லி வேதனைப்பட்ட போது என் இதயத்தில் குத்தப்பட்டேன். ஒரே ஒரு ரூபாய் செலவு பண்ணி நான் ஒரு Phone பண்ணி சொல்லியிருந்தால் அவனுக்கு ஒரு ஆண்டு வீணாய் போனதை நான் தடுத்திருந்திருக்கலாம்.

நான் பொறியியற்கல்லூரியில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற்று campus interview ல் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் நல்ல வேலையில் அமர்ந்தேன். சுமார் ஒரு வருடங்கள் சென்ற பின் என் கல்லூரி தோழன் ஒருவன் தனக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்றும், எதாகிலும் கம்பெனியில் openings இருந்தால் தனக்கு inform பண்ணுபடி எனக்கு மெயில் பண்ணியதோடு, தன்னுடைய Resume யும் அனுப்பியிருந்தான். சுமார் ஆறு மாதங்கள் சென்ற பின்பு ஒரு பன்னாட்டு நிறுவனமொன்றில் அவனுடைய profile match ஆகுவதுபோல ஒரு opening இருப்பதை கேள்விப்பட்டேன். என்னுடைய பணி சுமையின் காரணமாக என்னுடைய நண்பனுக்கு நான் அதை தெரிவிக்க மறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அந்த நண்பனை மீண்டும் சந்தித்தேன். அவன் இன்னும் வேலையில்லாமன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கண்ணீரோடு அவன் தன் சூழ்நிலையை சொன்னபோது என் இதயம் கனத்தது. அன்று நான் ஒரு நிமிடம் செலவு செய்து என் நண்பனுக்கு அந்த openings இருந்ததை சொல்லியிருந்தால் அவன் இன்று நல்ல ஒரு நிலையில் இருந்திருப்பான்.

வருடங்கள் சென்றன. ஒரு நாள் இரவு நான் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென என்னுடைய கல்லூரி ஜூனியர் நண்பன் ஒருவன் அலறிதுடித்துக்கொண்டு, ஐயோ! ஐயோ! தாங்கமுடியலியே. ஐயோ! தீயில் வேகிறேனே! அண்ணன் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தும் ஒரு நாள் கூட எனக்கு இயேசுவை பற்றி சொல்லவில்லையே! ஐயோ அண்ணன் என்னால் தாங்க முடியலியே. என்னுடைய தாகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்கவில்லயே. புழுக்களும், பாம்புகளும் என்மேல் ஊர்ந்து செல்லுகின்றது என்று கதறினான். அண்ணன் நீங்கள் ஒரு வார்த்தை இயேசுவைப் பற்றி சொல்லியிருந்தால் நான் இந்த கொடிய அக்னிகடலுக்கு தப்பியிருந்திருப்பேனே என்று அழுது புலம்பினான். திடீரெனே தூக்கம் கலைய விழித்துக்கொண்டேன். அப்போது அது கனவு என்பதை உணர்ந்தேன். ஆனாலும் அந்த நண்பனின் கொடிய அலறல் சத்தம் என் காதுகளை விட்டு ஓயவில்லை.

சில மாதங்கள் சென்ற பின்பு நான் தங்கையின் திருமணத்திற்க்காக என் சொந்த ஊருக்கு சென்ற போது அவனுடைய, நெருங்கிய கல்லூரி தோழன் ஒருவனை பார்த்தேன். உடனடியாக அந்த கொடிய அழுகையின் சத்தம் என் காதுகளில் தொனித்தது. உடனடியாக அந்த நண்பனை பற்றி அவனிடம் விசாரித்தேன். அப்போது அவனுடைய கண்கள் கலங்கியது, அவனுடைய வாய்கள் தடுமாறியது, அவன்... அவன் ... மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கொடிய மோட்டார் சைக்கிள் விபத்தில் பரிதாபமாய் மரித்துப் போனதாக சொன்னான். அப்போது எனக்கு புரிந்தது, அவன் நரகத்திற்கு சென்றது. என் இதயம் சுக்கு நூறாய் உடைந்தது. நான் செய்த மிகப்பெரிய தவறு நான் அவனுக்கு ஒரு முறை கூட இயேசுவின் அன்பையும், அவருடைய பாவமன்னிப்பையும் அவனுக்கு சொல்லாதது. நான் என்னுடைய பல நண்பர்களுக்கு இயேசுவை சொல்லியிருக்க்றேன். ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து என்னை கோமாளியாய் பார்ப்பார்கள். அதினிமித்தம் நான் பின்னாட்களில் யாருக்கும் இயேசுவைப் பற்றி அறிவிப்பதில்லை.

கிறிஸ்த்துவுக்குள் அன்பு நண்பர்களே பரிசுத்த வேதம் சொல்லுகிறது; பிரசங்கி 11:8 மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.

ஆம் நாம் உயிரோடு வாழும் நாட்களில், நம் உயிர் பிரிந்த பின்பு நரகம், பரலோகம் என்று இருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நரகத்திற்கு தப்பும் வழியை நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே தான் இயேசு சொன்னார்; யோவான் 14:6 நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் (பரலோகிற்கு) வரான்.

கிறிஸ்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment