Saturday, May 29, 2010

நாம் நினைப்பதை விட மிக சமீபம்

இயேசுவுக்கே மகிமை

(கிறிஸ்த்துவுக்குள் அன்பு சகோதரர் ஜி. ஐ. இருதய பிரின்ஸ் அவர்கள் இயேசுவின் வருகையை, நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு, நமது வாசகர்களுக்கு எழுதி அனுப்பிய Article . இதை நாம் வாசிக்கும்போது, நாம் நோவாவின் நாட்களை நினைத்துப்பார்ப்போம். நோவா சுமார் 120 வருடங்கள் பிரசங்கித்தும் மிக சிலராகிய 8 பேர் மட்டுமே பேழைக்குள் பிரவேசித்தனர். ஆம் இன்றும் நம்முடைய நண்பர்கள் எப்படியாகிலும் அழிவிலிருந்து தப்பவேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு, கதைகளாக, கட்டுரைகளாக, கவிதைகளாக சுவிஷேசம் அறிவிக்கப்படுகிறது. காதுள்ளவன் எவனோ அவன் கேட்கக்கடவன் என்று இயேசு சொன்ன பொன் மொழி தான் நமக்கு ஞாபகம் வருகிறது.)

நாம் நினைப்பதை விட மிக சமீபம்

இது வரை கேள்விப்பட்டிராத சம்பவங்கள்; ஒவ்வொரு துறையிலுமே அச்சுறுத்தல்கள்; எவ்வளவுக்களவு வளர்ச்சியோ அவ்வளவுக்களவு நிம்மதி இல்லை; எப்போதும், எதுவும் நடக்கலாம்.

அன்றாட சாமானியனுக்கும் நன்றாகவே புரிந்து விட்டது, இந்த உலகம் வழக்கமான பாதையை விட்டு மாறிச் செல்கிறது என்று. இருக்கும் வரை வாழ்வோம்; இறப்பு வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று தங்களுக்கு தாங்களே சமாதானம் செய்துகொண்டு அடிவயிற்றை பிடித்துக்கொண்டு, அடி மேல் அடி வைத்து, வெளியில் ஒரு பொய்யான சிரிப்பை உதிர்த்துக்கொண்டு உலாவுகிறார்கள் இந்த மகா ஜனங்கள்.

ஒரு மனிதனுக்கு ஏதாவது ஆபத்து என்றால், எனக்கு மட்டுமா இது? என்னைப்போன்று எவருக்காவது இப்படி நடக்கத்தான் செய்கிறது என்று 'company' தேடிக்கொள்கிறான். என் வீட்டில் தீ எரிந்தால் அதை விட்டுவிட்டு அடுத்த வீட்டின் நிலை என்ன என்பதே இன்றைய மனிதனின் மனப்பான்மை. பக்கத்துக்கு வீட்டில் பற்றி எரிந்தால் 'அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு...!’- எனக்கு மட்டுமா பிரச்சினை என்று அதே சால்சாப்பு...!!

அந்நாளில் மனிதனின் அன்பு தணிந்து போம் என்பது கடைசி காலத்தை கணித்துக்கொள்ள இயேசு கொடுத்த அடையாள வார்த்தை. தாம் சர்வ வல்லமையுள்ள தெய்வமாக, நியாயம் தீர்க்க , நடு வானில் நீங்களும் நானும் பார்க்க , ' எக்காளம் தொனிக்க' இதோ மேகங்கள் மீதில் வரப்போகிறார்! அதுவே இறுதிக்காலம்! இந்த உலக வாழ்க்கையின் பலனை அடைந்து தீர்க்கும் நியாயத்தீர்ப்பின் காலம்!

இந்த உலகத்தின் தொலைநோக்குதிட்டங்கள், வானளாவிய கட்டிடங்கள், வாழ்க்கை மேம்பாட்டுத் தீர்மானங்கள், சிலரின் சிலம்பாட்ட பேச்சுக்கள் இவைகளை உற்று நோக்கும் போது, ஏதோ இவர்கள் இந்த பூமியில் 1000 ஆண்டுகள் வாழும் வரம் பெற்று வந்தவர்கள் போலத்தோன்றுகிறது. இயேசுவின் வருகைக்கெல்லாம் இன்னும் நீண்ட களம் செல்லும் என்பது இவர்களின் இறுமாப்பு. நீங்கள் உங்கது டூவீலரில் இரண்டு பக்கமும் பொருத்தியிருக்கும் சைடு மிரரில் 'Objects In the Mirror are Closer than they Appear' என்ற வாசகம் பொறிக்கப்படிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, உங்களின் பின்புறம் வரும் வாகனம், கண்ணாடியில் தெரிவதைக்காட்டிலும் அருகில் இருக்கிறது என்பதே அந்த எச்சரிப்பு.

அதுபோல, இயேசுவின் வருகையை மிகத் தூரமாய்க்காட்டும் இது போன்ற இந்த உலகின் ஆசா பாசங்களாகிய கண்ணாடிகளை நம்பி மோசம் போய்விடாதீர்கள்.

உண்மையில், இயேசுவின் வருகை மிக சமீபமாய் இருக்கிறது. எனவே , ஆயத்தமாவோம்! பிறரை ஆயத்தப்படுத்துவோம்!

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

நன்றி : ஜி.ஐ. இருதய பிரின்ஸ்,
டெலிகாம் & நெட்வொர்கிங் எஞ்சினீயர்,
பெங்களூர்.

ஆண்டவராகிய இயேசுவின் வருகையை முதல் நூற்றாண்டிலேயே எதிபார்த்து மாரநாதா என்று ஒருவரை ஒருவர் வாழ்த்தினார்கள். மாரநாதா என்பதற்கு இயேசு வருகிறார் என்று அர்த்தமாம். இயேசு தம்முடைய வருகையைக் குறித்து சொன்ன அடையாளம், அத்திமரம் துளிர்விடும்போது நான் வாசலருகே நிற்கிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று. ஆத்திமரம் என்பது இஸ்ரேல் ஜனங்களின் அரசியல் வாழ்கையும், ஒலிவமரம் என்பது அவர்களது ஆவிக்குரிய வாழ்க்கையையும் குறிக்கும்.

கிறிஸ்த்துவுக்கு முன்பாகவே இஸ்ரேல தேசம் அந்நியர்களிடம் அடிமைப்பட்டுவிட்டது, டேசுவின் நாட்களில் அந்த தேசம் ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் அடிமையாய் இருந்தது. 1948 முன்பாக வரை உலக வரைபடத்தில் இஸ்ரேல என்ற ஒரு தேசம் இல்லை. அந்நாட்களில் அது பாலஸ்தீனா என்று இருந்தது. அப்போது அது இகிலாந்து நாட்டில் காலனி நாடாய் இருந்தது. இந்த நாட்களில் இஸ்ரேலர் உலகமெங்கும் சிதறடிக்கபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து ஏதோ ஒரு நாட்டிடம் (சரியாக பெயர் ஞாபகமில்லை) போரில் படுதோல்வி அடைந்து கொண்டிருந்தது. அப்போது வேறு வழி தெரியாத இங்கிலாந்து அரசு நமக்கு வெற்றி தேடி தருபவர் யாராக இருந்தாலும் அவர்கள் எதை கேட்டாலும் தருவதாக வாக்குறுதியளித்தனர். அப்போது யூதராகிய டாக்டர் வைஷ்மன் அவர்கள் RDX வெடிமருந்தை கண்டுபிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து பெரும் வெற்றி பெற்றது. டாக்டர் வைஷ்மன் அவர்களிடம் உங்களுக்கு என்னவேண்டும் என்று கேட்டபோது, அவர் யூதர்களாகிய தாங்கள் அடிமைகளாக அலைந்து திரிவதால் தங்களுக்கு, தங்கள் சொந்த நாடு திரும்ப தரப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார். அந்நாளில் பாலஸ்தீனா இங்கிலாந்தின் கீழ் அடிமையாய் இருந்ததால், உடனடியாக டாக்டர் வைஷ்மன் அவர்களை பிரதமராக நியமித்து இஸ்ரேல தேசம் உதயமாயிற்று. அப்போது பாலஸ்தீனிய முஸ்லிம்கள் அதை எதிர்த்து போரிட முயன்றனர். பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கீழ்க்கண்ட வசனத்தின் படி,

ஏசாயா 31:5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.

இங்கிலாந்தின் விமானங்கள் பறந்து இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அளித்தது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல சுதந்திரம் அடைந்தது. இயேசு சொன்னபடி அத்திமரம் துளிர்விட்டது. அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்திலேயே கடைசி மணிநேரம் என்று கணிக்கப்பட்டது. அப்படியானால் 1948 ஐ கடைசி நிமிடம் என்று கணிக்கலாம். அப்படியானால் இன்றைய நாட்களை கடைசி வினாடி என்று ஒப்பிடலாம். ஆம் இயேசுவின் வருகை அவ்வளவு சீக்கிரம்.



மாரநாதா! இயேசு வருகிறார்!!

கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment