Saturday, May 29, 2010

எரிச்சல் ஏற்படுவது ஏன்?

இயேசுவுக்கே மகிமை

எரிச்சல் ஏற்படுவது ஏன்?

ஆதியாகமம் 4:6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?

ஒரு மனிதன் செலுத்தும் காணிக்கைகளை அல்லது அவன் செல்லுத்தும் ஆராதனையை அல்லது ஜெபத்தை தேவன் அங்கீகரிக்காதபோது, அந்த மனிதனுக்குள் எரிச்சல் ஏற்படுகிறது. உதாரணமாக நாம் தேவ சமுகத்தில் ஜெபிக்கும் போது அந்த ஜெபத்தை தேவன் அங்கிகரிக்காத போது அந்த ஜெபம் திரும்ப நம்முடைய மடியிலே வருகிறது. அப்போது எரிச்சல் உண்டாகிறது.

ஆதியாகமம் 4:5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.

சங்கீதம் 35:13 நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது.

ஒரு மனிதன் தன் ஜெப அறையிலிருந்து வரும்போது, சந்தோஷமாய், புன்சிரிப்போடு வந்தால் நாம் உடனடியாக புரிந்து கொள்ளலாம், தேவன் அவர்கள் ஜெபத்தை அங்கீகரித்துள்ளார் என்றும் தேவனுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு சரியாக உள்ளது என்றும். மாறாக அவர்கள் துக்கத்தோடும் அல்லது சிறு காரியங்களுக்கும் அவர்களுக்கு எரிச்சல் உண்டாகி, அவர்கள் முகத்தை சுருக்கி முகநாடி வேறுபட்டிருந்தால் அவர்கள் ஜெபம், அல்லது ஆராதனை அல்லது காணிக்கையை தேவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும் அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள உறவு சீராயில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலும் தேவன் அவரது பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் போது, அவர்களுடைய சத்துருக்களுக்கு தானாகவே எரிச்சல் ஏற்படுவது வழக்கம். ஆகவே தேவ பிள்ளைகள் தேவன் தங்களை ஆசீர்வதிக்கும்போது புது வீடு கட்டும்போது, அல்லது புதிய கார் வாங்கும் போது அல்லது ஏதோ ஒரு ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் போது ஜாக்கிரதையாய் இருந்து தங்களையும், தங்கள் உடமைகளையும் இயேசுவின் இரத்தத்திற்குள் மறைத்து பாதுகாக்க பழகிக்கொள்ள வேண்டும்.

யாத்திராகமம் 1:12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

எபேசியர் 4:26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment