Saturday, May 29, 2010

சிந்திக்க சில வரிகள்

இயேசுவுக்கே மகிமை


போதகர் ஒருவர் Orkut ல் Post செய்துள்ள வரிகளை தெரிந்தெடுத்து, அவருடைய அனுமதியுடன், தேவ நாம மகிமைக்காகவும், அநேகருடைய பிரயோஜனத்திற்காகவும் இங்கு வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நன்றி பாஸ்டர் .


சிந்திக்க சில வரிகள்

தேவனுக்கு முன்பாக மண்டியிடாதவன் உலகத்திற்கு முன்பாக மண்டியிடுவான்.

ஜெப அறையில் அழாதவன் வெளியிலே அழுது கொண்டிருப்பான்.

விதைப்பு இல்லாமல் அறுவடை என்பது என்றுமே இல்லை.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வதற்காகவே எல்லாவற்றையும் இழந்து போகிறான்.

இயேசுவே உனக்கு ஆதாரம் மற்றவையெல்லாம் உனக்கு சேதாரம்.

கற்றுக் கொடுப்பதற்கு ஆசைப்படுவதைக் காட்டிலும் கற்றுக்கொள்ளவே அதிகமாய் ஆசைப்படு.

விசுவாசியின் மூலதனம் விசுவாசமே.

நாம் ஜெயிக்க நமக்குத் தேவை தேவகிருபையே, நம் திறமை அல்ல.

தேவனுக்குத் தேவை உன் உதவி அல்ல - உன் ஒப்புக் கொடுத்தலே.

அன்றைய பிரசங்கம் மற்றவர்களை காக்க. இன்றைய பிரசங்கம் மற்றவர்களை தாக்க.

அன்று : வாழ்க்கை தேவனுக்காக. இன்று : தேவன் வாழ்க்கைக்காக.

கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment