Wednesday, May 5, 2010

இலக்கை நோக்கி

இயேசுவுக்கே மகிமை

இலக்கை நோக்கி

பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

ஒலிம்பிக் போட்டி என்பது விளையாட்டு உலகின் மிகப்பெரிய கனவு உலகு ஆகும். ஒலிபிக் போட்டி பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலங்களில் வெற்றி பெறுவோருக்கு ஒலிவ இலைகளாலான கிரீடம் சூட்டப்பட்டது.

I கொரிந்தியர் 9:24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக கேரளாவை சேர்ந்த சைனி வில்சன் என்ற ஓட்ட பந்தய வீராங்கனை, நமது இந்திய நாட்டின் சார்பாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டார்கள். போட்டி ஆரம்பமானது, சைனி வில்சன் அதிவேகமாக ஓடி முன்னிலையில் ஓடி கொண்டிருந்தார். கரவொலி விண்ணை பிளக்க, ரசிகர்கள் உற்சாக மூட்ட முதன்மையாக வந்து தன் இலக்கை தொட்டுவிட்டார். ரசிகர்களுக்கு மிகப்பயங்கர சந்தோசம், அதை விட சைனி வில்சனுக்கோ தாங்க முடியாத சந்தோசம். நடுவர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டார். அந்தோ பரிதாபம், சைனி வில்சனின் பெயர் பட்டியலில் இல்லை. இமைப்பொழுதில் அவருடைய சந்தோசம் பறிபோனது. மார்பிலடித்து கதறி அழுதார். ஏன், ஏன் என்று அழுது புலம்பினார். நடுவர்கள் அவர் ஓடிய போது எடுத்த வீடியோவை போட்டுக் காண்பித்தார்கள். அவர்கள் அவருக்கு கொடுக்கப்பட்ட அந்த Track யை விட்டு அவர்கள் விலகி ஓடியது தெளிவாக காண்பிக்கப்பட்டது. அவர்கள் முதலாவதாக தன் இலக்கை அடைந்தும், அவர்களால் வெற்றி வாகை சூட முடியாமல் போனது.


I கொரிந்தியர் 9:25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

பொதுவாகவே எந்த ஒரு விளையாட்டில் பங்கு பெறுவோராக இருந்தாலும், அவர்களுக்கு பலவிதமான கட்டுபாடுகள் இருக்கும். அதாவது அவர்களுக்கு உணவு கட்டுப்பாடுகள், தூங்குவதில் கட்டுபாடுகள் உண்டு. மேலும் அவர்கள் சரியான அளவில் உடல் பயிற்சிகள், அதோடு கூட அவர்கள் எந்த விளையாட்டில் பங்குபெறுகிறார்களோ அந்த விளையாட்டில் சரியான பயிற்சி இருந்தால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற முடியும்.


ஆம் கிறிஸ்த்தவ உலகிலும் கண்களின் இச்சை, மாசத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இந்த மூன்றையும் வென்றால் தான் பரம அழைப்பின் பந்தய பொருளை நாம் பெற்று கொள்ள முடியும்.


பிலிப்பியர் 3:14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

ஆம் கிறிஸ்தவ உலகிலும் ஒரு இலக்கு உண்டு. சரியான முறையில் ஓடி அந்த இலக்கை அடைந்தால் மட்டுமே நாம் பரிசு பொருளை பெற முடியும். இதை எழுதிக் கொண்டிருக்கிற எளியவனும் மிகவும் நடுக்கத்துடனேயே எழுதுகிறேன். யார் வேண்டுமானாலும் எழுதலாம், யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் எழுதுகிறபடியும், பேசுகிறபடியும் வாழ்ந்து காட்டுவதே சாதனை.

கிறிஸ்தவ உலகிலும் பல இலக்கு உண்டு. ஆனால் இன்று பலர் இலக்கு தெரியாமல் அல்லது தவறான இலக்குகளில் ஓடுகிறார்கள் என்பதை கண்ணீரோடு கூட இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது தேவன் பழைய ஏற்ப்பாட்டில் விருத்த சேதனம் என்ற ஒன்றை கட்டளையிட்டதுபோல, புதிய எற்ப்பாட்டிலும் ஞானஸ்நானம் என்ற ஒன்றை கட்டளையிட்டுருக்கிறார். இது ஞானம் + ஸ்நானம், அதாவது அறிவு வந்த பின் தண்ணீரில் இறங்கி முழுகி எடுப்பது தான் வேதாகமம் நமக்கு நியமித்திருக்கிற ஞானஸ்நானம். ஆனால் இதை பலர் (குழந்தை ஸ்நானம், தெளிப்பு ஸ்நானம்) செய்து இலக்கை சிறு குழந்தையிலேயே முதலாவதாக அடைந்தாலும், இது தவறாக Track மாறி நாம் அடையும் இலக்கு ஆகும்.

மத்தேயு 3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

மாற்கு 1:10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்.

தேவனை ஆராதிப்பதில் ஒரு இலக்கு உண்டு, தூய ஆவியானவரின் வல்லமையை பெற்று கொள்வதில் ஒரு இலக்கு உண்டு. நாம் உடைகள் அணிவதில் ஒரு சரியான இலக்கு உண்டு. உபாகமம் 22:5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

கொலோசெயர் 2:19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து ஒருவரே ஆராதனைக்கு பாத்திரர். அவரையன்றி வேறொருவரையும் நாம் ஆராதிக்கக் கூடாது, அது தேவ தூதர்களானாலும் சரி. மகா பரிசுத்தமுள்ளவரும், நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், தாம் ஒருவராய் பெரிய அதிசயங்களை செய்கிறவருமாகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து ஒருவரே சகல கனத்திற்கும், மகிமைக்கும், புகழ்ச்சிக்கும், ஆராதனைக்கும் பாத்திரர்.

II திமோத்தேய:7. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.

8.
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment