Saturday, May 15, 2010

வேதாகமத்தால் நமக்கு உண்டாகும் மேன்மை

இயேசுவுக்கே மகிமை

வேதாகமத்தால் நமக்கு உண்டாகும் மேன்மை

உலகத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகம் எது என்றால், நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடியே அது பரிசுத்த வேதாகமம் தான். உலகம் முழுவதிலுமாக அநேக ஆன்மீக புத்தகங்கள் இருந்தாலும் பரிசுத்த என்ற சிறப்புப் பெயரை தாங்கிய ஒரே புத்தகமும், பரிசுத்தத்தை வலியுறுத்தும் ஒரே புத்தகமும் பரிசுத்த வேதாகமம் மாத்திரமே.

தங்களுடைய ஆரம்ப காலத்தில் அல்லது துன்ப வேளைகளில் வேதாகமத்தை சுமந்த அநேகரை இந்த வேதாகமம் சுமந்திருக்கிறது.

அநேக அமெரிக்க அதிபர்கள் இந்த வேதாகமத்தை சுமந்து கொண்டு தேவாலயத்துக்கு சென்றதை தமிழ் பத்திரிகைகளில் புகைப்படம் போட்டிருந்ததை பார்த்திருந்திருக்கிறேன். வேதத்தை சுமந்த அவர்கள் உலகிலேயே மிக உன்னத பதவிகளை வகித்துள்ளனர். அவர்கள் வெட்கப்பட்டு போனதில்லை.

நம் சுதந்திரத்திற்காக போராடிய வேளையில் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் துப்பாக்கி ஏந்தாமல் சுதந்திரம் பெற முடியாது என்றார். ஆனால் நமது தேச பிதா காந்தியடிகள் சாத்வீகத்தாலும், சத்திய கிரகத்தாலும் சுதந்திரம் வாங்குவேன் என்று உறுதியாக கூறினார். ஒரு முறை பத்திரிகையாளர்கள் அவரை பேட்டியெடுத்த போது, இது எப்படி சாத்தியம் என்று கேட்டனர். அப்போது அவர் சொன்னார் மத்தேயு 5 : 5 . மத்தேயு 5 : 5 என்ன சொல்லுகிறது, சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியை சுதந்தரித்துகொள்வார்கள். ஆம் அவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பே சுதந்தரத்தை பெற்றார். இந்தியாவை சுதந்தரித்துகொண்டார்.

நமது முன்னாள் ஜனாதிபதி ஒருவரிடம், மாணவன் ஒருவன் கேட்டானாம் லீடர் ஷிப்பை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள நல்ல புத்தகம் எது என்று. அதற்கு அவர் சொன்ன பதில் பரிசுத்த வேதாகமத்தில் நீதி மொழிகள் என்ற ஒரு புத்தகமுண்டு, அதை படி என்று சொன்னாராம்.

நமது இந்திய நாட்டின் சட்டத்தை தொகுத்து வழங்கியவர் டாக்டர் அம்பேத்கார் அவர்கள். ஆனால் அதை எழுதியவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மெக்காலே பிரபு என்பவர். அவரிடம் இதை குறித்து பேட்டியெடுத்த போது, அவர் சொன்னார் சர்வலோக நியாதிபதியாகிய தேவன் எழுதிக்கொடுத்த பத்துக்கட்டளை களையும், நியாயபிரமாணத்தையும் வைத்து இயற்றியது தான் என்று சொன்னாராம்.

அநேக புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்கள் பலர் வேதாகமத்தை படித்து அதன்படி நடந்தவர்கள். பல கண்டுபிடிப்புகள் வேதாகமத்திலிருந்தே ஐடியாக்கள் பெறப்பட்டன.

உலகிலேயே மிக நுட்பமான யுத்த தந்திரங்களை கொண்ட ராணுவம் இஸ்ரேலிய ராணுவம் ஆகும், காரணம் அவர்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி புறப்பட்ட போது அவர்களை தேவனே வழிநடத்தினார். அவர்களுக்கு தேவனே பல யுத்த தந்திரங்களை கற்றுக்கொடுத்தார். இவைகள் இன்றும் வேதாகமத்திலுள்ள ராஜாக்களின் புத்தகம், நாளாகமத்தின் புத்தகம் போன்றவற்றில் நாம் பார்க்கலாம். இவைகளை பின்பற்றுவதாலே இஸ்ரேல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாட்டின் ராணுவங்கள் சிறப்பாக உள்ளது.

போதகர் ஒருவர் மிக ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் அவரும் மனைவியுமாக ஜெபித்து வேதாகமத்தை வாசித்தனர். வறுமையின் உச்சகட்டம் அவர்களை வாதித்தது. தேவ ஆவியானவர் அவர்கள் வாசித்த வேத பகுதியை திரும்ப திரும்ப வாசிக்கும்படி ஏவினார். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனாலும் திரும்ப திரும்ப வாசித்தனர். அப்போது ஆவியானவர் அவர்களுடைய வறுமை மாறி செழிப்புண்டாகுபடி ஒரு தொழில் ஆரம்பிக்கும்படியான ஆலோசனையை கொடுத்தார். அவர்கள் அன்று வாசித்த வேத பகுதி ரோமருக்கு எழுதின நிருபம் 16 வது அதிகாரம். இந்த அதிகாரம் முழுவதும் பவுல் விசுவாசிகள் ஒவ்வொருவருவருக்காக வாழ்த்து சொல்லும் அதிகாரம் ஆகும். அன்றைய நாட்களில் வாழ்த்து அட்டைகள் இல்லை. இந்த வாழ்த்துதல் அதிகாரத்தின் மூலம் தேவன் அந்த அமெரிக்க தம்பதிகளுக்கு கொடுத்த வெளிப்பாட்டின் மூலம் வந்ததுதான் வாழ்த்து அட்டைகள்.

வேதாகமத்தை நாமும் நேசித்து, அதை வாசித்து, தியானித்தால் நாமும் அறிவில் சிறந்து விளங்கலாம். மேலும் பரிசுத்தமாய் இந்த பூமியில் வாழலாம். நமக்கு வேண்டிய செழிப்பும் இதன் மூலம் நமக்கு கிடைக்கும்.

கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment