Saturday, May 29, 2010

யோசேப்பு அடிமையா?

இயேசுவுக்கே மகிமை

யோசேப்பு அடிமையா?

I கொரிந்தியர் 6:12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் நெருக்கபடுகையில் அவன் அறிந்திருக்க வேண்டிய ஒன்று அது சாபத்தினிமித்தம் வந்ததா? இல்லை அது தேவன் நம்மை பரிசுத்தப்படுத்தி ஆசீர்வதிக்கும்படி அவர் நடத்தும் பாதையா? என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும்.

அநேகர் சாபத்தின் பிடியில் இருந்து கொண்டு யோசப்பை போல தேவன் தங்களை நடத்துவதாக நினைக்கலாம். ஆனால் சாபத்தினால் வரும் அடிமைத்தனத்திற்கும், தேவன் நடத்தும் பாதைக்கும் வித்தியாசம் உண்டு. தேவன் யோசேப்பை உன்னதமான ஒரு நிலைக்கு உயர்த்தும் படி அவனை புடமிட்டார். அவன் அடிமையாக விற்கப்பட்டது உண்மை. ஆனால் தேவன் அவனை அடிமையாக வைக்கவில்லை. அவன் போத்திப்பாரினுடைய வீட்டில் எல்லாவற்றையும் விசாரிக்கிற ஒரு அதிகாரமுள்ள பொறுப்பிலிருந்தான், அங்கு அடிமையாய் இருக்கவில்லை. அடுத்தது சிறைச்சாலைக்கு சென்றான், அங்கும் தலைமை விசாரிப்புக்காரனாய் இருந்தான், அங்கும் தேவன் அவனை அடிமையாய் வைக்கவில்லை. அங்கிருந்து முழு எகிப்திற்கும் அதிகாரியாய் சிங்காசனத்திற்கு உயர்தப்பட்டான். இந்த உன்னத நிலையை அடைய தேவன் நியமித்த பாதை தான் அதற்கு முந்தய சில பாடுகளின் பாதைகள். (போத்திப்பாரின் மனைவியால் பொய் குற்றம் சாட்டப்பட்டது, சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டது, சொந்த தேசத்தை விட்டு அடிமையாய் விற்கப்பட்டது.)

பிசாசு ஒரு மனிதனை அடிமை படுத்த சிலதந்திரங்களை கையாளுகிறான். இதினிமித்தம் மனிதர்களின் சமாதானத்தை கெடுத்து, அவர்களை மரணத்திற்கு நேராய் அல்லது வாழ்கையை வெறுக்கப்பண்ணுகிறான். இதற்காக அவன் சில காரியங்களுக்கு நம்மை அடிமை படுத்துகிறான். அவைகள்,

1. கடன்வாகும் படி நம்மை தூண்டி கடனுக்கு அடிமைப்படுத்துகிறான் (கிரடிட் காடும் பொருந்தும்). எனவே நாம் கடனுக்கு அடிமையாகாத படி நம்மை காத்துக்கொள்வோம்.

நீதிமொழிகள் 22:7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.

2. பாவத்திற்கு நம்மை தூண்டி, இச்சைகளுக்கு அடிமைபடுத்தி பலவித நோய்களுக்கு நம்மை உட்படுத்துகிறான். எனவே பாவத்திற்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

யோவான் 8:34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

3. மதுபானத்திற்கு அடிமையாகாதிருப்போம்.

தீத்து 2:3 முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக் கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாத வர்களுமாயிருக்கவும்,

4. காதல் போன்றவற்றிக்கு நம்மை அடிமைப்படுத்தி, கடைசியில் தோல்வியை உண்டுபண்ணி தற்கொலைக்கு நேராய் நம்மை வழிநடத்துவான். எனவே எந்த ஒரு மனிதனுக்கும் அடிமையாகாத படி நம்மை காத்துக்கொள்வோம்.

I கொரிந்தியர் 7:23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்.

எரேமியா 30:8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.

ஆகவே நாம் தேவனுக்கு நம்மை அடிமைகளாக ஒப்புக்கொடுப்போம். இதினிமித்தம் நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து, பல ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ளலாம். இயேசுவின் தாய் மரியாள் தன்னை தேவனுக்கு அடிமையாக ஒப்புக கொடுத்ததினிமித்தம் எல்லா சந்ததிகளும் அவர்களை பாக்கியவதி என்று அழைக்கும் சிறப்பை பெற்றார்கள்.

லூக்கா 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.

ரோமர் 6:18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.

ரோமர் 6:22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment