Saturday, May 29, 2010

இன்று ஒரு கேள்வி – 8

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 8


தேவன் மன்னிக்க முடியாத இரண்டு பாவங்கள் எவைகள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பாலாம்.

1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 04.06.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

22.05.2010 அன்றைய ன்று ஒரு கேள்வி 7” க்கான சரியான விடைகள்.


இன்றைய நவீன காலத்தில் கால்சென்றர் போன்ற புதிய தொழில்களால், இரவு(முழு இரவு) நேர பணி பல தொழில் நகரங்களில் வேகமாக பரவி, நடந்து வருகிறது. இப்படி தொடர்ந்து இரவு நேர பணிகளால் மனிதனின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மேலும் பாவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வேதாகமம் நாம் உழைத்து, பணி செய்ய நமக்கு எந்த வேளை சிறந்தது என்று நியமித்துள்ளது. உங்கள் கருத்துக்களை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.


சங்கீதம்104 : 22. சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.

சங்கீதம்104 : 23. அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன்பண்ணைக்கும் புறப்படுகிறான்.

மேற்கண்ட வசனத்தின்படி மனிதன் தான் உழைத்து பணிசெய்ய வேதாகமம் கூறும் சிறந்த வேளை காலையிலிருந்து சாயங்காலம் வரையே. ஆகவே தொடர்ந்து இரவு நேர பணி செய்யும் தேவ பிள்ளைகள், என் நாமத்தினாலே எதை கேட்டாலும் தருவேன் என்று வாக்களித்த தேவனிடம், பகல் பொழுதில் நல்ல ஒரு வேலையை கேட்டுப்பெற்றுக்கொள்வோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக!

யோவான் 14:14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.


கிறிஸ்த்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

1 comment: