Wednesday, May 5, 2010

அன்பு தம்பிக்கு ஓர் மடல்

இயேசுவுக்கே மகிமை

அன்பு தம்பிக்கு ஓர் மடல்

தம்பி உன் கடிதம் கிடைத்தது. உனக்கு அரசினர் மருத்துவக் கல்லூரியில் Admission கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நம்முடைய அப்பாவின் நீண்ட நாள் கனவை நீ நனவாக்கியுள்ளாய். உனக்கு என் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்ளுகிறேன்.

தம்பி நீ எல்லாவற்றையும் பற்றி எழுதியுள்ளாய், ஆனால் உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையையும், உன் பரிசுத்தத்தையும், தேவனோடு உள்ள உன் ஐக்கியத்தும் குறித்து நீ எழுதாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. தேவன் இவ்வளவாய் உன்னோடு கூட இருந்து, நம்முடைய ஏழ்மை நிலையிலும் உனக்கு படிக்க வாய்ப்பை தந்து, நல்ல மதிப்பெண்களுடன் வெற்றிபெற செய்த தேவன் இயேசுவை மறந்து போனாயோ?

நீ விடுதியில் தங்கி படிப்பதை உன் கடிதம் வாயிலாக தெரிந்து கொண்டேன். இது சற்று எனக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகிங் பற்றிய கவலைதான், ஆனாலும் ஜெபித்துக்கொள், தேவன் உன்னை எல்லா தீங்கிற்கும் விலக்கி பாதுகாத்துக் கொள்வார்.

தம்பி நீ விடுதியில் படிப்பதால் உனக்கு சில அறிவுரைகளை கூறுவது நலம் பயக்குமென கருதுகிறேன். I தீமோத்தேயு 4:12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு சக மாணவர்களுக்கு மாதிரியாயிரு. மேற்கண்ட வசனத்தின் படி உன்னை காத்துக்கொள்.

கல்லூரி விடுதியில் இயேசுவை அறியாத உன் நண்பர்கள் உன்னை, உன்னுடைய பரிசுத்தை குலைக்கும் பலவித கதை புத்தகங்களை படிக்கவும், சினிமா பார்க்கவும், பீடி, சிகரெட் பிடிக்கவும் உன்னை வற்புறுத்தலாம். இவைகளுக்கு உன்னை விலக்கி பாதுகாத்துக்கொள். மேலும் எதிர் பாலினரோடு பழகும் போது, ஜாக்கிரதையாயிரு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் சற்று (இரண்டடி) தள்ளி நின்று பேசு. இது உன்னுடைய பரிசுத்தத்தை நீ பாதுகாத்துக்கொள்ள உனக்கு உதவியாயிருக்கும். I தீமோத்தேயு 5:2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, நடந்துகொள்.

எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவையும், யோசப்பு, தானியேல் போன்றோர்களையும் உன்னுடைய ரோல் மடலாக வைத்துக்கொள். உன்னுடைய பாவ சூழ்நிலைகளில் இயேசுவை நினைத்துப்பார், அவர் லாசருவின் சகோதரிகளாகிய மரியாள், மார்த்தாள் மற்றும் சமாரியா ஸ்திரீ போன்றோர்களிடம் (சகோதரிகளைப் போன்று) எப்படி பழகினார் என்பதையும், யோசேப்பு போத்திபாருடைய மனைவியிடத்திளிருந்து எப்படி தன்னை பாவத்திலிருந்து பாதுகாத்தார் என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்.

வகுப்பறையில் ஆசிரியர்களை கிண்டல் செய்யும் மாணவர்களோடு சேர்ந்துவிடாதே. பாடங்களை நன்கு கவனித்து நன்றாக படித்து அப்பாவின் கனவை நனவாக்கு. மேலும் நீ Free யாக இருக்கும் போது உன்னிலும் சற்று ஞானத்தில் குறைவுள்ள நண்பர்களுக்கு பாடங்களை புரியும்படி கற்றுக்கொடு. தேவன் அதற்கேற்ற பிரதிபலனை பினாட்களில் உனக்கு தருவார். மேலும் Exam களில் ஒருபோதும் காப்பியடிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்யாதே. உன்னுடைய படிப்பு மனித உயிர்களோடு சம்பந்த்தப்பட்டது. எனவே இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாயிரு.

மேலும் உன்னுடைய நண்பன் John Civil Engg . படிக்கிறான், அவனிடமும் இதைப்பற்றி சொல். ஆரம்பத்தில் Basic தெரியாமல் காப்பியடித்துப் படித்தால் அவனுக்கு Civil Engg . பற்றிய சரியான Foundation இல்லாமல் போய்விடும். கடைசியில் அவன் ஒரு வீடு கட்ட Foundation போட்டால் எப்படியிருக்கும் என்பதை நினைத்துப்பார்.

நம்முடைய விவசாயம் தேவனுடைய கிருபையால் நன்றாக உள்ளது. இந்த வருடம் அமோக விளைச்சல் இருக்கும் என தேவனில் விசுவாசிக்கிறேன். இங்கு மழையில்லாமல் மிகுந்த வறட்சியாக உள்ளது. ஆனாலும் நானும், அப்பாவும் முழு மூச்சுடன் தண்ணீர் பாய்ச்சுவதில் கவனம் செலுத்துகிறோம். நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல், உன்னுடைய படிப்பில் கவனம் செலுத்து. மற்றவை நேரில்.

இப்படிக்கு,
உன் நலம் விரும்பும் அண்ணன்,
டேவிட்.

II தீமோத்தேயு 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.

கிறிஸ்த்துவில் அன்புடன்,
தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment