Saturday, May 15, 2010

இன்று ஒரு கேள்வி – 6

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 6


தாவீது கோலியாத்தை கொன்று, வெற்றியோடு திரும்புகையில் பெண்கள் நடனமாடி; சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறை, முறையாக பாடினர். இப்படி பாடியதால் சவுல், தாவீதின் மேல் பொறாமைகொண்டான். இது சவுலுடைய ராஜ்யபார வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. அந்த பெண்கள் பாடியது தவறா? இல்லை சவுல் புரிந்து கொண்டது தவறா? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.

1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 21.05.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.

08.05.2010 அன்றைய ன்று ஒரு கேள்வி 5” க்கான சரியான விடைகள்.


யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறப்பதற்கு, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் ஆபிரகாம். மேற்கண்ட வசனத்தில் இயேசு சொன்னார்; ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆபிரகாம் எங்கே, எப்போது இயேசுவை கண்டார்?


ஆபிரகாம் தன் ஏக சுதனும், நேச குமாரனுமாகிய ஈசாக்கை பலிபீடத்தின் மேல் கிடத்தி, அவனை பலியிட துணிந்த போது கர்த்தருடைய தூதனானவர் அவனை தடை செய்து, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் காண்பித்தார். அந்த ஆட்டுக்கடா யார் தெரியுமா? பரிசுத்த வேதம் கூறுகிறது; வெளி 5:6 இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; ஆம் அந்த ஆட்டுக்குட்டி உலக தோற்றத்திற்கு முன்பே அடிக்கப்பட்டவண்ணமாயிருந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து . ஆபிரகாம் தன் ஏக சுதனும், நேச குமாரனுமாகிய ஈசாக்கை பலியிட துணிந்த போது அவருடைய இதயம் சுக்கு நூறாய் உடைந்திருக்கும். ஆனால் ஈசாக்குக்கு பதிலாக அந்த முட்புதரில் சிக்கியிருந்த ஆட்டுகடாவை அவர் பார்த்த போது அவர் இதயம் களிகூர்ந்தது. அந்த ஆட்டுக்கடா ஈசாக்கிற்கு பதிலாக பலியிடப்பட்டது, ஆகவே ஈசாக்கு காப்பாற்றப்பட்டான். அதுபோலவே நாம் ஆக்கினைதீர்படைய வேண்டிய இடத்தில் கல்வாரி சிலுவையிலே இயேசு நமக்கு பதிலாக ஆகினைதீர்ப்படைந்தார். ஆகவே நாம் நமக்கு வரவேண்டிய தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டோம்.

கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment