Saturday, May 15, 2010

இன்று ஒரு கேள்வி – 5

இயேசுவுக்கே மகிமை


இன்று ஒரு கேள்வி – 5


யோவான் 8:56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாய் பிறப்பதற்கு, சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் ஆபிரகாம். மேற்கண்ட வசனத்தில் இயேசு சொன்னார்; ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். ஆபிரகாம் எங்கே, எப்போது இயேசுவை கண்டார்? உங்கள் கருத்தை வேத வசன ஆதாரத்துடன் எழுதி அனுப்பலாம்.


1 . மேற்கண்ட கேள்விகளின் விடையை எழுதி அனுப்ப வேண்டிய கடைசி நாள் 14.05.2010 .


2 .
சரியான விடையை எழுதி அனுப்புவோரின் பெயர்கள் இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


3 .
இன்று ஒரு தகவல் - வேதமும் விளக்கமும் நடுவர்க் குழுவின் தீர்ப்பே இறுதியானது.


4 .
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bibleqnandar@gmail.com

5 . மறவாமல் உங்களது முழுப் பெயரையும், ஊர் பெயரையும், தாங்கள் செல்லும் சபையின் பெயரையும் குறிப்பிடவும்.


24.04.2010 அன்றைய இன்று ஒரு கேள்வி 4” க்கான சரியான விடைகள்.

சங்கீதம் 115:16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். மேற்கண்ட வசனத்தின்படி பூமி மாத்திரமே மனுஷனுடைய குடியிருப்புக்காக தேவன் நியமித்திருக்கிறார். ஆனால் விஞ்ஞானிகளோ சந்திரனில் மனிதன் வாழ முடியுமென கருதி அங்கு குடியிருப்புகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இது சத்தியமா? மனிதன் சந்திரனில் வாழ முடியுமா?


தற்போது விஞ்ஞானிகள் தீவிரமாக விண்ணில் குடியிருப்புகள் கட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் பரிசுத்த வேதம் கூறுகிறது, ஒபதியா 1:4 நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,


ஆரம்பத்தில் இந்த முயற்சிகள் வெற்றிபெறலாம். மனிதன் தற்போது நிலவில் பனிக்கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளான். இதை தண்ணீராக மாற்றி, தண்ணீரை இரண்டாக பிரித்து அதாவது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து, அந்த ஆக்சிஜனை சுவாசிக்க பயன்படுத்தலாம் என்பது விஞ்ஞானிகளின் திட்டம்.


எரேமியா 49:16 நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


ஆனால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக தேவன் வேதாகமத்தில் எழுதி வைத்துள்ளார், கடைசிகாலத்தில் சந்திரன் ரத்தமாய் மாறும் என்று. சந்திரன் ரத்தமாய் மாறினால் அங்கு உள்ள பனிக்கட்டிகளில் வித்தியாசம் உண்டாகி அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக மாற்ற முடியாமல் போகலாம். இதினிமித்தம் அங்கு வாழ முடியாத சூழ்நிலை உருவாகலாம்.


அப்போஸ்தலர் 2:20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

வெளி 6:12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

எது எப்படியோ விண்ணில் வீடு கட்டி நிரந்தரமாக வாழமுடியாது என்பது மட்டும் திண்ணம்.


கிறிஸ்துவில் அன்புடன்,

தேவனின் எழுதுகோல்.

No comments:

Post a Comment